Thursday, July 2, 2009
# கனம்
மௌனமும் உறங்கும்
பின் நள்ளிரவில்....
குழந்தைகளை விடவும்
குழந்தைகளைப் போல்
குழந்தைகளை விடவும்
குழந்தைத்தனமாக
குழந்தைகளை விடவும்
குழந்தைக் குரலில்
குழந்தைகளை விடவும்
குழந்தைகள் பாணியில்
குழந்தைகளை விடவும்
குழந்தைகள் மழலையில்
குழந்தைகளை விடவும்
குழந்தைகளின் தவிப்பில்
குழந்தைகளை விடவும்
குழந்தைகளாக
'ங்கா' விடும்
குட்டிப் பூனைகளின்
குரல்கள் கேட்கும்போதெல்லாம்
தவறாமல்
ஞாபகம் வருகிறது ,
சிறுவயதில்
பார்த்ததொரு
சின்னக் குழந்தையின்
மரணம் .
இன்னும்
இருள்கிறது,
இருட்டு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment