Thursday, July 16, 2009

# பூ


நீ .

Sunday, July 5, 2009

# ஆஹா



ஒவ்வொரு
குழந்தையின்
முகத்தையும்

ஒவ்வொரு
முறை
பார்க்கும்போதும்
ஏற்படுகிறது....

ஒரு
நல்ல கவிதையை
எழுதி முடித்த
மகிழ்ச்சி!

Friday, July 3, 2009

#அப்படியானால்



உங்களைப்
பார்த்து

பல பேர்
பொறாமைப்
படுகிறார்களா?

அப்படியானால்
நீங்கள்
பெரிய ஆள்.

ஆனால்

நீங்கள்
யாரைப்
பார்த்தும்
பொறாமைப்
படவில்லையா?

அப்படியானால்

நீங்கள்
ரொம்பப்
பெரிய ஆள்.

Thursday, July 2, 2009

# கனம்



மௌனமும் உறங்கும்
பின் நள்ளிரவில்....


குழந்தைகளை விடவும்
குழந்தைகளைப் போல்

குழந்தைகளை விடவும்
குழந்தைத்தனமாக

குழந்தைகளை விடவும்
குழந்தைக் குரலில்

குழந்தைகளை விடவும்
குழந்தைகள் பாணியில்

குழந்தைகளை விடவும்
குழந்தைகள் மழலையில்

குழந்தைகளை விடவும்
குழந்தைகளின் தவிப்பில்

குழந்தைகளை விடவும்
குழந்தைகளாக‌

'ங்கா' விடும்
குட்டிப் பூனைகளின்
குரல்கள் கேட்கும்போதெல்லாம்

தவறாமல்
ஞாபகம் வருகிறது ,

சிறுவயதில்
பார்த்ததொரு
சின்னக் குழந்தையின்
மரணம் .

இன்னும்
இருள்கிறது,
இருட்டு.

Wednesday, July 1, 2009

# புரிஞ்சு போச் !


மனசின் விசாலம்....
அதுவே
வாழ்வின் விலாசம்!

# பூவும் பெண்ணும்




பூ

விற்கும்
பெண்கள் யாரும்
அழகாகத் தெரிவதில்லை.



காரணம் ....
பூக்களை விட
எந்தப் பெண்ணும்
அழகில்லை.!